நாவல்

அனைத்து தலைசிறந்த கதைகள்

image57 1000x1000h

பட்டு

புத்தகத்தின்பெயர்: பட்டு ஆசிரியர்: Alessandro Baricco பக்கங்கள்: 125 வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம் தகத்தின்பெயர்: பட்டுஆசிரியர்: Alessandro Bariccoபக்கங்கள்: 125வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன் காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது. மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான். நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே […]

பட்டு Read More »

நாகம்மாள்

நாகம்மாள்

நாகம்மாள் – ஒரு வாசிப்பு அனுபவம் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க க்ளாசிக் நாவல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுமார் 120 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் முதன்முதலில் 1942ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் காலச்சுவடு பதிப்பகம் மூலம் மறுபதிப்பாக வெளிவந்தது. 1940களிலேயே ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தகைய நாவலை எழுதியிருப்பது ஆசிரியரின் சமூகப் பார்வையையும் படைப்புத் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது. இந்த நாவலின் மையக் கதாபாத்திரம் நாகம்மாள் என்ற விதவை பெண்.

நாகம்மாள் Read More »

kidathi

கிடாத்தி

கிடாத்தி என்பது எழுத்தாளர் பாலஜோதி ராமச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட, 225 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நாவல். பெண்ணிய சிந்தனையையும், சமூகத்தின் மறைக்கப்பட்ட வலிகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாசகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சிந்திக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த நாவலின் மையத்தில் மூன்று இளம்பெண்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர்களில் ஒருவர் திருநங்கை, மற்றொருவர் பேச்சுக் குறைபாடு கொண்டவர், இன்னொருவர் மிகுந்த ஏழ்மையான குடும்பச் சூழலில் வாழ்பவர். மூவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து

கிடாத்தி Read More »

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம் தமிழ் இலக்கியத்தில் கிராமிய வாழ்வியலை மிகவும் இயல்பாகவும் ஆழமாகவும் பதிவு செய்த சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்பை எழுதியவர் கி. ராஜநாராயணன். “கி.ரா” என்று அன்போடு அழைக்கப்படும் இவர், கரிசல் மண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனநிலைகளை தனது எழுத்தின் மூலம் உயிரோட்டத்துடன் பதிவு செய்தவர். அந்த வகையில் “கோபல்ல கிராமம்” என்பது வெறும் நாவல் மட்டுமல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை

கோபல்ல கிராமம் Read More »

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு ஈரங்கள் உள்ளன ஒவ்வொரு கருவிலும். மொத்த ஊரையும் அப்போது உள்ள கால கட்டத்தில் மந்திரங்கள் மற்றும் மீன்கள் சார்ந்த ஊர் என தெளிவுபட தனது முன்னுரையிலே கொடுத்திருக்கிறார். செய்தி கட்டுரை எழுத ராமேஸ்வரம் சென்ற ஆசிரியர் அந்த தீவுகளில் அப்போதைய கால கட்டத்தில் நடந்திருந்த நிகழ்வுகள் அல்லது அவலங்கள்

அலை உறங்கும் கடல் Read More »

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன்

இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது. ஒரு அழகான கிராமம் அதில் வாழ்கின்ற எளிமையான மக்கள், ஜாதி வேரூன்றி இருந்தாலும் மென்மையான மானுடம் போன்று கதையின் களத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஆசிரியர். தன் தந்தையை மிகுந்து நேசிக்கும் மகனிடம், தந்தை கூறுகின்ற அந்த உண்மை நம் மனதின் ஆழத்தை அதிக படுத்தி செல்கிறது. உன் அம்மா என் மனைவி இல்லை

ஒரு உலகம் ஒரு வீடு ஒரு மனிதன் Read More »

ஜந்து

ஜந்து

ஜந்து ஜந்து – ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம்பா. ராகவன் எழுதிய ஜந்து என்பது சாதாரணமாகப் படித்து முடித்துவிடக்கூடிய நாவல் அல்ல. அது வாசகனின் மனதுக்குள் மெதுவாக நுழைந்து, நீண்ட நேரம் அங்கே தங்கி விடும் ஒரு படைப்பு. மனிதன், அவனுடைய உள்ளுணர்வு, அடக்கி வைத்திருக்கும் வன்முறை, பயம், சமூக கட்டமைப்பு – இவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் ஆராயும் ஒரு தீவிர உளவியல் நாவல் இது. ஜந்துவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ வாழ்க்கையிலிருந்து அதிக

ஜந்து Read More »

மேற்கில் ஒரு குற்றம்

மேற்கில் ஒரு குற்றம்

புத்தகத்தின் பெயர்: மேற்கில் ஒரு குற்றம்ஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர்பக்கங்கள்: 101வெளியீடு: விசா பதிப்பகம் “மூன்று குற்றங்கள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நாவல், சுஜாதாவின் வழக்கமான வேகமான மற்றும் சுவாரஸ்யமான திரில்லர் பாணியை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு சிறந்த படைப்பு. கதை, ஒரு பெண் கணேஷின் அலுவலகத்திற்கு வந்து உதவி கோரும் தருணத்தில் தொடங்குகிறது. அவள் விட்டுச் செல்லும் ஒரு காகிதத்தில் வரையப்பட்ட வட்டங்கள்—அதுவே கதையின் முக்கிய துருப்புச் சீட்டாக மாறுகிறது. அடுத்த நாளே அந்த

மேற்கில் ஒரு குற்றம் Read More »

அனிதா – இளம் மனைவி

அனிதா – இளம் மனைவி

புத்தகத்தின் பெயர்: அனிதா – இளம் மனைவிஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர் 48வது புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு நான் வாசித்த முதல் நூல் இதுதான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் சுஜாதாவின்து என்பதால், இந்த நூலை ஒரு எதிர்பார்ப்புடன் எடுத்தேன்—அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் படைப்பாக இது அமைந்தது. 158 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், வெறும் இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடிக்க வைத்தது. அதற்குக் காரணம், கதையின் ஓட்டமும், சுஜாதாவின் எளிமையான மற்றும் ஈர்க்கும் எழுத்து நடை.

அனிதா – இளம் மனைவி Read More »

அதிசயம் அது ரகசியம்

அதிசயம் அது ரகசியம்

புத்தகத்தின் பெயர்: அதிசயம் அது ரகசியம்ஆசிரியர்: லட்சுமி பிரபாபக்கங்கள்: 326வகைமை: நாவல் / திரில்லர் / அமானுஷ்யம் “அதிசயம் அது ரகசியம்” என்ற இந்த நாவல், உணர்ச்சி, மர்மம், மற்றும் ஆன்மீகத் தளங்களின் கலவையாக அமைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. கதை தொடங்குவது, தன் அப்பாவை இழந்த துயரத்தில் அழும் நாயகி வானதியின் மனநிலையிலிருந்து. அந்த தொடக்கமே வாசகரை உடனே கதைக்குள் இழுத்துச் செல்கிறது. வானதி, சத்யன், மற்றும் அவளது அப்பா நடேசன்—இவர்கள் மூவரும் பத்திரிக்கை உலகைச்

அதிசயம் அது ரகசியம் Read More »