Blog

Your blog category

vetti 2820054 1100x1100h

வேட்டி

புத்தகத்தின்பெயர்: வேட்டி பக்கங்கள்: 120 ஆசிரியர்: கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தனித்துவமான குரலாக விளங்கிய கி. ராஜநாராயணன் அவர்களின் மண் வாசனை நிறைந்த எழுத்துக்களால் உருவான சிறுகதைத் தொகுப்புதான் வேட்டி. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூல், கிராமிய வாழ்க்கையின் பல பரிமாணங்களை எளிமையாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்கிறது. நூலின் தொடக்கத்தில், இந்தச் சிறுகதைத் தொகுப்பு எவ்வாறு அச்சு வடிவம் பெற்றது என்பதையும், அதனுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் […]

வேட்டி Read More »

unnamed

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்

புத்தகத்தின்பெயர்: தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் பக்கங்கள்: 216 ஆசிரியர்: பெ.சுப்பிரமணியன் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது இந்த சினிமாவின் அசுர வளர்ச்சிக்கு இந்த நாட்டுப்புற இயல்கள் எவ்வாறு இறையாயிருக்கிறது என்பதை சற்று கணத்த இதயத்துடனே நம்மால் உணர முடிகிறது. நாட்டுப்புற இயல்களின் அடிப்படையில்தான் சினிமா தோன்றினாலும் ஆனால் அதன் வளர்ச்சி மற்றும் மக்களின் உள்ளக் கிளிச்சியும் நம் முன்னோர்களின் இந்த கலைகளை மறந்து விடச் செய்கிறது என்பது கூடுதல் கசப்பு. எவ்வாறு ஒவ்வொரு திரைப்படமும்

தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் Read More »

image57 1000x1000h

பட்டு

புத்தகத்தின்பெயர்: பட்டு ஆசிரியர்: Alessandro Baricco பக்கங்கள்: 125 வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம் தகத்தின்பெயர்: பட்டுஆசிரியர்: Alessandro Bariccoபக்கங்கள்: 125வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன் காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது. மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான். நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே

பட்டு Read More »

ஏன் வாசிக்க வேண்டும்

ஏன் வாசிக்க வேண்டும்

புத்தகத்தின் பெயர்: ஏன் வாசிக்க வேண்டும் ஆசிரியர்: ஆர். அபிலாஷ் பக்கங்கள்: 153 இந்த தலைப்பைப் பார்த்தவுடன், இந்தப் புத்தகம் ஆரம்ப நிலை (amateur) வாசகர்களுக்கு உகந்ததா என்று கேட்டால், இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். இதற்கான காரணங்களைப் பார்க்கலாம். இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் வாசிப்பின் சிறப்பையும், அது உருவாக்கக்கூடிய நல்ல பழக்கங்களையும் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால், பிற்பகுதியில் வரும் தொடர்ச்சியான கட்டுரைகள் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு சற்றே அதிகமாக (overdose போல) தோன்றக்கூடும்

ஏன் வாசிக்க வேண்டும் Read More »

eன் தந்தையைக் கொன்றவர் யார்

என் தந்தையைக் கொன்றவர் யார்

புத்தகத்தின்பெயர்: என் தந்தையைக் கொன்றவர் யார் பக்கங்கள்: 79 ஆசிரியர்: எதுவார் லூயி மொழி பெயர்ப்பாளர்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வகைமை: மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம் இந்த புத்தகத்தின் விமர்சனத்திற்கு செல்லும் முன் மொழிப்பெயர்ப்பு மொழிப்பெயர்ப்புவந்தி சுருக்கமாக காண்கலாம். மொழிப்பெயர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிப்பெயர்ப்புக்காக பல உயரிய விருதுகளை வாங்கிருக்கிறார் என முன்னுரையில் தெரியபடுத்துள்ளது அதே போல் இந்த புத்தகத்திலும் தனது பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் என சொல்லலாம் இருந்தாலும் இந்த நூலில் வரும் சில கதைகளின் வாக்கிய அமைப்புகள்

என் தந்தையைக் கொன்றவர் யார் Read More »

நிழல்களால் உருவாக்கப்பட்டவன்

நிழல்களால் உருவாக்கப்பட்டவன்

புத்தகத்தின் பெயர்: நிழல்களால் உருவாக்கப்பட்டவன்கவிதாசிரியர்: சுஜித் ஜூவிபக்கங்கள்: 64வகைமை: கவிதை இது என் வாசிப்பு வாழ்க்கையில் நான் முதன்முறையாக படித்த கவிதைத் தொகுப்பு. பொதுவாக நாவல்கள் வாசிப்பதிலேயே பழகியிருந்த எனக்கு, இந்தக் கவிதை நூல் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. ஆச்சரியமாக, கவிதைகள் வாசிப்பது மிகவும் சுவாரசியமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள், எளிய சொற்களிலேயே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதல், நவீன வாழ்க்கை, தனிமை, நகைச்சுவை ஆகியவை அனைத்தும் கலந்த

நிழல்களால் உருவாக்கப்பட்டவன் Read More »

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

புத்தகத்தின் பெயர்: எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0ஆசிரியர்: சோம வள்ளியப்பன்பக்கங்கள்: 213வகைமை: சுய முன்னேற்றம் / உளவியல் “எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0” என்பது நம்முடைய உணர்வுகளை எவ்வாறு புரிந்து கொண்டு, சரியாக கையாள்வது என்பதை மிகவும் எளிமையாகவும் தாக்கமுள்ளதாகவும் விளக்கும் ஒரு பயனுள்ள நூல். வாசிக்க ஆரம்பித்தவுடன் ஈர்க்கும் இந்த புத்தகம், உள்ளடக்கத்திலும் அதே அளவு வசீகரத்தைக் கொண்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி உணர்வுகளின் எதிர்மறை விளைவுகளை எடுத்துரைக்கிறது; பின்னர் அதே உணர்வுகளை நேர்மறையாக மாற்றிக் கொள்ளும்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 Read More »

do it today

Do It Today

Book Title: Do It TodayAuthor: Darius ForouxPages: 140Genre: Self-help / Productivity “Do It Today” என்பது காலம் தாழ்த்தும் பழக்கத்தை (Procrastination) வெல்ல உதவும் ஒரு எளிமையான மற்றும் நடைமுறை சார்ந்த சுய முன்னேற்ற நூல். இதற்கு முன் Brian Tracy எழுதிய Eat That Frog போன்ற புத்தகங்களை வாசித்த அனுபவம் இருந்தால், இந்த நூல் இன்னும் எளிதாகப் புரியும். இந்த புத்தகத்தின் முக்கிய பலம் அதன் எளிமையான மொழி மற்றும்

Do It Today Read More »

உடலினை உறுதி செய்

உடலினை உறுதி செய்

புத்தகத்தின் பெயர்: உடலினை உறுதி செய்ஆசிரியர்: சைலேந்திரபாபுபக்கங்கள்: 215வகைமை: கட்டுரை / சுய முன்னேற்றம் / ஆரோக்கியம் “உடலினை உறுதி செய்” என்ற தலைப்பே இந்த புத்தகத்தை கையில் எடுக்க தூண்டும். தலைப்புக்கு ஏற்றவாறு, உடல் நலம் குறித்து பல விஞ்ஞான அடிப்படையிலான கருத்துகளை சைலேந்திரபாபு தெளிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் உடலுக்கு மட்டும் அல்லாமல் மனம், உறவுகள், சந்தோஷம், ஒழுக்கம், தியானம், உறக்கம் போன்ற வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் ஆராய்கிறது. குறிப்பாக உணவு பற்றிய அவரது

உடலினை உறுதி செய் Read More »